Wednesday, 4 February 2015
செம்பரத்தை (Hibiscus rosa-sinensis)
செம்பரத்தை (Hibiscus rosa-sinensis)
செம்பரத்தை(செம்பருத்தி) பூவைத் தேனில் ஊற
வைத்துக் கொண்டு தினம் இருவேளை ஐந்து இதழ்களை உண்டு வர குருதி தூய்மையாகும்; இரும்புச்சத்து அதிகமாகும்.
உலக
அளவில் சர்க்கரை நோயின் தலைமையகமாக இந்தியா மாறியிருக்கிறது. உலக மக்கள் தொகை அடிப்படையில்
இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் உலகிலேயே அதிகமான நீரிழிவு நோயாளர்கள் இருக்கிறார்கள்.
சர்க்கரை நோய் அரக்கனால் உலகம் முழுவதிலும் 28.5 கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில வருடங்களாக
இந்தியாவில் சர்க்கரை
நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் தற்போது சுமார் 5.08
கோடி பேர் இந்நோயால்
பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுடன் ஒப்பிடும்போது இது இரு மடங்கு ஆகும். இந்த எண்ணிக்கை
அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்காக உயரும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த
புள்ளிவிவரங்கள் எல்லாம் இந்தியர்களின் ஆரோக்கியம் ஆபத்தான கட்டத்தை அடைந்திருப்பதை காட்டுவதாக மருத்துவ
நிபுணர்களால் பார்க்கப்படுகிறது. பெருகிவரும் இந்த சுகாதார நெருக்கடி குறித்து விவாதிப்பதற்கான
தெற்காசிய நாடுகளின் மாநாடு ஒன்று சமீபத்தில் சென்னையில் நடந்தது.
World Diabetes
Foundation எனப்படும் உலக நீரிழிவு நோய்
நிறுவனம், சர்க்கரை நோய்க்கான சர்வதேச
கூட்டமைப்பு, உலக வங்கி மற்றும்
ஐ.நா.மன்றத்தின் உலக சுகாதார அமைப்பு ஆகியவை இணைந்து இந்த சர்வதேச மாநாட்டை நடத்தின. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட
பல்வேறு சர்வதேச நீரிழிவு நோய் நிபுணர்களும், சுகாதார மேலாண்மை வல்லுனர்களும் நீரழிவு நோய் தொடர்பில்
இந்தியா சந்தித்துவரும்
சவால்கள் குறித்தும், அதனை
எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் விரிவாக
விவாதித்தார்கள். பொதுவாகவே வசதி படைத்த நகர்புறவாசிகளின் நோயாக பார்க்கப்படும் சர்க்கரை
நோய், இன்று இந்தியாவின் கிராமப்
புறங்களிலும் வேகமாக
அதிகரித்து வருவதை பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்துவதாக இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை,
இளைய தலைமுறை இந்தியர்களிடம் பெருகிவரும் ஒபிசிடி
எனப்படும் உடல் பருமன் என்பது எதிர்காலத்தில் நீரிழிவுநோயின் தாக்கத்தை அதிகப்படுத்தும்
என்று எதிர்வு கூறுகிறார்கள் நீரிழிவு நோய் நிபுணர்கள்.
எபிடெமிக்
என்கிற ஆங்கில வார்த்தையை, இதுவரை
நாம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிற ஒரு தொற்று நோயாக குறிப்பிட்டு வந்திருக்கிறோம். சர்க்கரை
நோயானது தொற்றுநோயைப் போல வேகமாக பரவி வருகிறது. அதுமட்டுமல்ல, சர்க்கரை நோய் என்பது குறிப்பிட்ட
குடும்பங்கள், சமூகம், மக்கள் தொகையில் ஒருவிதமான தொடர்பு தொற்றாக உருவாகியிருப்பதையும்
நாம் காண்கிறோம்.
உலக
நீரிழிவுநோய் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பேராசிரியர் பியர் லெபெர் ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்து விட்டால் அவர், தனது வாழ்நாள் முழுமையும் மருந்து மாத்திரைகளை
சார்ந்தே உயிர்
வாழவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறார். இந்த மருந்து மாத்திரைகளை சார்ந்து வாழும் நிலைமை
என்பது சர்க்கரை நோயாளிகளுக்கும் அவர் தம் குடும்பங்களுக்கும் மிகப்பெரும் பொருளாதார
சுமையை ஏற்படுத்துகிறது. பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் இந்தியா போன்ற ஒரு
நாட்டில், சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய
கூடுதல் பொருளாதார சுமையை தாங்க முடியுமா என்பது பலராலும் முன்வைக்கப்படும் முக்கிய கேள்வி.
அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் கோடிக்கணக்கான
ஏழைகளை நீரிழிவு நோய் என்பது மீளமுடியாத பொருளாதார படுகுழியில் தள்ளிவிடும் என்கிற அச்சங்கள் வலுப்பெற்று
வருகின்றன.
இத்தகைய ஏழை குடும்பங்களில் ஏற்படக்கூடிய பொருளாதார பின்னடைவு என்பது, அவரையும் அவரது குடும்பத்தையும் மட்டுமல்ல. இவரைப்போல் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த இந்தியாவின் உற்பத்தி திறனையும் அது பாதிக்கும் என்பது தான் இதில் பொதிந்திருக்கும் உள்ஆபத்து.
இத்தகைய ஏழை குடும்பங்களில் ஏற்படக்கூடிய பொருளாதார பின்னடைவு என்பது, அவரையும் அவரது குடும்பத்தையும் மட்டுமல்ல. இவரைப்போல் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த இந்தியாவின் உற்பத்தி திறனையும் அது பாதிக்கும் என்பது தான் இதில் பொதிந்திருக்கும் உள்ஆபத்து.
இந்திய
ஏழைகள், தங்களின் மருத்துவ சிகிச்சைக்கு ஆகும்
செலவில் 80 சதவீதத்தை தமது சொந்த
பணத்தில் இருந்து செலவிடுவதாக எங்கள் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்டவர்களுக்கு சர்க்கரைநோய் போன்ற
வாழ்நாள் முழுமைக்கும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோய் வந்துவிட்டால், அவர்களின் வருமானத்தில் கணிசமான பகுதி அந்த சிகிச்
சைக்காகவே செலவிடவேண்டிய சூழல் உருவாகும்.
உலக
வங்கியின் தெற்காசிய மனித வளமேம்பாட்டு பிரிவின் பொது சுகாதாரத்துறை நிபுணர்
மருத்துவர் மைக்கேல் எங்கெல்காவ். 1922ஆம்
ஆண்டில் பேண்டிங்க் அண்ட் பெஸ்ட் என்ற கனெடிய விஞ்ஞானிகள் கூட்டணி இன்சுலின் மூலம் நீரிழிவு
நோயை குணப்படுத்தலாம் என்று கண்டறிந்தனர்.
நீரிழிவு
நோய் என்பது மருத்துவ சிகிச்சை முறையால் குணப்படுத்த முடியாத நோயாகவே மனிதர்களை
அச்சுறுத்தி வந்தது. இன்சுலினை கண்டுபிடித்த பிரெடெரிக் பேண்டிங்கின் நினைவைப் போற்றும் விதமாக அவரது பிறந்த தினமான
நவம்பர் 14 ஆம் தேதி, ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக உலகம் முழுவதும்
கடைபிடிக்கப்படுகிறது. ஐநா மன்றம் இந்த நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்
நோக்கில் தனியான அடையாள சின்னம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது.
“சர்க்கரை
நோய் குறித்து சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறியப்பட்டிருந்தாலும்,
இதற்கான வலுவான சிகிச்சை முறை என்பது இருபதாம் நூற்றாண்டில்
தான் உருவானது. 1922 ஆம் ஆண்டில் பேண்டிங்க்
அண்ட் பெஸ்ட் என்ற கனெடிய விஞ்ஞானிகள் தான் இன்சுலின் மூலம் நீரிழிவு நோயை முழுமையாக
கட்டுப்படுத்தலாம் என்று கண்டறிந்தனர். அதுவரை, ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்தால் மரணம் நிச்சயம் என்கிற
நிலைதான் நீடித்தது."
நீரிழிவு நோய் ஆய்வாளர் எஸ். குணசேகரன்
மனித
உடம்பின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று சர்க்கரை. நாம் சாப்பிடும் உணவில் இருக்கும்
மாவுச்சத்து தான் சர்க்கரையாக (குளுகோஸாக) மாறி, ரத்தத்தில் கலந்து மனிதனுடைய உடல் இயக்கத்திற்கு தேவைப்படும் சக்தியை அளிக்கிறது.
இப்படி ரத்தத்தில் கலக்கும் சர்க்கரை, சக்தியாக மாறவேண்டுமானால் மனிதனின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையம் என்கிற
உறுப்பு இன்சுலின் என்கிற ஹார்மோனை சுரக்க வேண்டும். இந்த இன்சுலின் தான் ரத்தத்தில்
இருக்கும் சர்க்கரையை சக்தியாக மாற்றும். கணையத்தில் சுரக்கும் இன்சுலினின் அளவு
குறைந்தாலோ, அல்லது முற்றாக நின்றுபோனாலோ,
மனிதனின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை
அப்படியே தேங்கிவிடும்.
இப்படி ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக போவது தான் சர்க்கரை நோய்
என்று அறியப்படுகிறது. சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்திருக்கிறதா இல்லையா என்பதை அவரின்
ரத்தத்தில் இருக்கும்
சர்க்கரையின் அளவை வைத்து கண்டுபிடிக்கலாம்.
ஒருவர்
உணவு சாப்பிடுவதற்கு முன்னர் அவரது ரத்தத்தில், நூறு மில்லி லிட்டர் ரத்தத்தில் எழுபது மில்லிகிராம் சர்க்கரை இருக்கும். அதே நபருக்கு
சாப்பிட்ட பிறகு, அவருடைய
ரத்தத்தில் நூறு மில்லி லிட்டர் ரத்தத்தில் நூற்றி இருபது முதல் நூற்றி முப்பது
மில்லிகிராம் சர்க்கரை
வரை காணப்படும். இந்த அளவுக்கு மேல் ஒருவரின் ரத்தத்தில் சர்க்கரை காணப்பட்டால் அவருக்கு
சர்க்கரை நோய் வந்திருப்பதாக கருதப்படும். இந்தியர்களை பெருமளவு தாக்கத்
துவங்கியிருக்கும் நீரிழிவு நோயை சர்க்கரை நோய் என்று பொதுப்பெயரிட்டு அழைத்தாலும்,
சர்க்கரை நோயில் இருபதுக்கும் மேற்பட்ட உட்பிரிவுகள்
இருக்கின்றன. இவற்றில் நான்கு வகையான நீரிழிவு நோயின் உட்பிரிவுகள், அதாவது முதல் வகை சர்க்கரை நோய், இரண்டாவது வகை சர்க்கரை நோய், கர்ப்ப கால சர்க்கரை நோய், கணையத்தில் ஏற்படும் கற்களால் ஏற்படும் சர்க்கரை நோய் என்கிற நான்கு வகையான
சர்க்கரை நோய்கள் தான் இந்திய உபகண்டத்தை சேர்ந்தவர்களில் 98 சதவீதமானவர்களை தாக்குவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
முதல் ரக
சர்க்கரை நோய் என்பது பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் தன்மை கொண்டது.
இதனால் சில மருத்துவர்கள் இதை குழந்தைகளின் சர்க்கரை நோய் என்றும்
அழைக்கிறார்கள். குழந்தை பிறந்தது முதல் முப்பது வயது வரை தாக்கும் தன்மை கொண்டது. இந்த
முதல் பிரிவு சர்க்கரை
நோய் ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பில் தெளிவான உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் எட்டப்படவில்லை.
மனிதர்களின் உடம்பில் இயற்கையிலேயே இருக்கும் நோய் எதிர்ப்புத்தன்மையானது, திடீரென்று கணையத்தை தாக்கி அதில் இருக்கும் இன்சுலின்
சுரக்கும் லாங்கர்ஹரன் திட்டுக்களை முற்றாக அழித்து விடுகிறது. இதனால் இன்சுலின் சுரக்கும் தன்மையை
கணையம் இடிந்து விடுகிறது. இப்படி மனித உடம்பின் ஒரு பகுதி செல்கள், இன்னொரு பகுதி செல்களை ஏன் தாக்குகிறது என்பதற்கு
இதுவரை உறுதியான காரணங்கள் தெரியவில்லை.
ஒருவகையான
வைரஸ் தாக்குதல் காரணமாகவே இப்படி நடப்பதாக சமீபத்திய கண்டுபிடிப்புகள் கூறினாலும்
அந்த குறிப்பிட்ட வைரஸை இனம் காண்பதற்கான ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனால் இந்த முதல் ரக
சர்க்கரை நோயைப் பொறுத்ததவரை, இது
ஒருவருக்கு வந்ததால்
அவருக்கு ஆயுட்காலம் முழுமைக்கும் இன்சுலின் ஊசிமூலம் சர்க்கரையை கட்டுப்பாட்டில்
வைத்திருப்பது தான் ஒரே வழி. அதேசமயம் உலக அளவிலும், இந்தியாவிலும், எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பாலானவர்களை பாதிப்பது இரண்டாவது ரக நீரிழிவுநோய். இந்த இரண்டாவது ரக
சர்க்கரை நோயைப் பொருத்தவரை, அது
ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
(உலக
அளவிலும், இந்தியாவிலும். பெரும்பாலானவர்களை
பாதிப்பது இரண்டாவது ரக நீரிழிவுநோய். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோரிடமிருந்து மரபணுக்கள்
மூலமாக அவர்களின் சந்ததிகளுக்கு நீரிழிவு நோய் தொடர்வதாக மருத்துவ ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
நீரிழிவுநோய் நிபுணர் மருத்துவர் வி. மோகன்)
பெற்றோருக்கு
நீரிழிவு நோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான
வாய்ப்புகள் 80%. அது தவிர கூடுதல் உடல்
பருமன் மூலமும் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதிகபட்ச கொழுப்புச்சத்துள்ள உணவுகள்
சாப்பிடுவது, உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை போன்ற
காரணங்கள் ஒருவருக்கு சர்க்கரை நோயை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும் ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர். மூன்றாவது வகையான கர்ப்பகால சர்க்கரை நோய் சில பெண்களுக்கு
கர்ப்பகாலத்தில் தற்காலிகமாக வருவது. கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகமாக
இருப்பதாலும் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி காரணமாகவும்
பெண்களுக்கு கூடுதலாக இன்சுலின் தேவைப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இந்த
கூடுதல் இன்சுலின் இயற்கையாகவே சுரந்தாலும், சில
பெண்களுக்கு இது சுரப்பதில்லை. அதனால் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து
அவர்களுக்கு நீரிழிவு நோய் உண்டாகிறது. இவர்களின் கர்ப்பத்தின் இறுதியில்
குழந்தை பிறந்ததும் இவர்களில் பலருக்கு சர்க்கரை நோய் மறைந்துவிடும்.
நான்காவது
ரக சர்க்கரை நோயைப் பொருத்தவரை கணையத்தில் ஏற்படும் கற்கள் காரணமாக இது உருவாகிறது.
போஷாக்கின்மை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுப்புற காரணங்கள் இது உருவாவதற்கு
காரணமாக கூறப்படுகிறது.
ஒருவர்
அதிகம் சர்க்கரை சாப்பிட்டால் அவருக்கு சர்க்கரை நோய் வருமா என்கிற கேள்வி பலரின்
மனதிலும் எழுவது இயற்கை. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் நீரிழிவு நோய் நிபுணர் மருத்துவர் பாலாஜி, உடல் ஆரோக்கியமாக இருக்கும் சராசரி மனிதர்
ஒருவர் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சர்க்கரை அல்லது இனிப்பின் அளவுக்கும் அவருக்கு நீரிழிவு நோய்
வருவதற்கும் நேரடி தொடர்பில்லை என்கிறார். அதே சமயம் அவரது பெற்றோர் இருவருக்கும் நீரிழிவு நோய் இருந்து,
அவர் உடற்பயிற்சி செய்யாதவராகவும் இருந்து, அவருடைய உடல் பருமனும் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான மரபுக்
காரணிகளும், சுற்றுப்புறக்
காரணிகளும் அதிகபட்சமாக இருக்கும் பின்னணியில், ஒருவர் அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால், அது அவரது உடல் எடையை அதிகரிக்கச்செய்து, அதன் மூலம் நீரிழிவு நோய் வருவதை ஊக்குவிக்கும்
காரணியாக இந்தக் கூடுதல் சர்க்கரை அமைவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் அவர்
தெரிவித்தார்.
அடுத்ததாக
சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்திருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்கு
பொதுவான அறிகுறிகள் சில இருக்கின்றன. அதிக பசி, அதிக சோர்வு, எடை குறைதல், அடிக்கடி சிறுநீர்கழித்தல்,
ஆறாத புண்கள் ஆகிய அறிகுறிகள் நீரிழிவு
நோய் வந்திருப்பதை
குறிப்புணர்த்துவதாக கருதப்படுகின்றன. இப்படிப்பட்ட அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால் அவர்கள்
அவசியம் நீரிழிவு நோய் இருக்கிறதா என்பதை கண்டறியும் ரத்த பரிசோதனையை செய்து கொள்வது
மிகவும் அவசியம். அதே சமயம் நீரிழிவு நோய் தாக்கியவர்களில் சுமார் ஐம்பது
சதவீதம் பேருக்கு இத்தகைய அறிகுறிகள் தெரிவதில்லை. சில சதவீதம் பேருக்கு இந்த அறிகுறிகள் வெளியில் தெரியாமலே
இருக்கும் என்பது தான் நீரிழிவு நோயில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவ அவலம். இப்படியான
அறிகுறிகள் அற்ற நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை நோயின் பாதிப்புகள் வெளியில்
தெரியும்போது, அவர்களில் பலருக்கு
பாதிப்புகள் கடுமையாக இருக்கும். இதைப் போக்க வேண்டுமானால் நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே
கண்டுபிடிப்பது அவசியமாகிறது.
இதன் ஒரு
பகுதியாக பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு 25 வயதாகும்போது கண்டிப்பாக நீரிழிவு நோய் இருக்கிறதா என்று பரிசோதனை
செய்து கொள்வது அவசியம் என்று சர்க்கரை நோய் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
அதுவும் தவிர, பொதுவாக தங்களுக்கு நீரிழிவு
நோய் வருவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பதை யார் வேண்டுமானாலும் அறிந்து கொள்வதற்கு ஒரு எளிய
வழிமுறை இருக்கிறது என்கிறார் நீரிழிவுநோய் நிபுணர் மருத்துவர் மோகன். அதாவது
ஒருவரின் வயது, அவர் செய்யும் உடற்பயிற்சியின்
அளவு, அவரது இடுப்பின் சுற்றளவு
மற்றும் அவரது பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா இல்லையா என்கிற நான்கு காரணிகளை கணக்கிடுவதன் மூலம் அந்த
குறிப்பிட்ட நபருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா இல்லையா என்பதை
யார் வேண்டுமானாலும் கணக்கிட்டு பார்த்துக் கொள்ள முடியும் என்கிறார் மோகன். இப்படியாக நீரிழிவு நோயை அதன் ஆரம்ப
கட்டத்திலேயே கண்டறிந்தால், அதை
கட்டுப் படுத்துவதும் எளிது. நீரிழிவு நோய் உண்டாக்கக் கூடிய இதர உடல் நலக்
கோளாறுகளையும் தவிர்க்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
நீரிழிவு
நோய் என்பது அடிப்படையில் வாழ்முறை சார்ந்த ஒரு நோய் என்பதால், இந்தியர்களின் வாழ்முறையில் குறுகிய காலத்தில் ஏற்பட்ட மிகப்
பெரும் மாற்றங்கள், நீரிழிவு நோயை
பெருமளவில் தூண்டி
விட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அரிசி சாதம் சாப்பிடுவதனால் மட்டுமே ஒருவருக்கு நீரிழிவு
நோய் வந்துவிடுவதில்லை. அன்றாட உணவில் அரிசியோடு கூட கேழ்வரகு போன்ற மற்ற தானிய
வகைகளும், பச்சை காய்கறிகளும் சம அளவு
இருந்த நிலைமை மாறி, சராசரியாக
ஒருவர் சாப்பிடும் அன்றாட உணவில் அரிசியின் அளவு மட்டுமே 90 சதவீதத்திற்கும் அதிகமாகி விட்ட சமச்சீரற்ற உணவுப்பழக்கம் நீரிழிவு தூண்டும்
காரணியாக அமையும்… நீரிழிவு நோய் தொடர்பான உணவியல்
நிபுணர் இந்திரா பத்மாலயம்.
அதாவது
விஞ்ஞான முன்னேற்றத்தால் உருவான தொழில் வளர்ச்சி மற்றும் அது ஏற்படுத்திய பல்வேறு வசதி
வாய்ப்புகள் காரணமாக இந்தியர்களின் உடல் உழைப்பு பெருமளவு குறைந்துவிட்டதாகவும், இதனால் அவர்கள் உடலின் இன்சுலின் சுரக்கும் தன்மை
குறைந்து, நீரிழிவு நோய் என்பது இந்தியாவின் மிகப்பெரும்
மருத்துவ நெருக்கடியாக உருவாகியி ருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். குறிப்பாக,
கிராமம் சார்ந்த, விவசாயப் பொருளாதாரத்தை நம்பியிருந்த இந்தியர்கள், நகர்மயமான அலுவலகம் சார் வாழ்க்கை முறைக்கு மாறியிருப்பது
அவர்களின் அன்றாட உடல் உழைப்பின் அளவை வெகுவாக குறைத்ததாக பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக,
இந்தியாவில் கிராமங்கள் வரை எட்டியுள்ள சாலை வசதிகள்,
அதனால் அதிகரித்திருக்கும் வாகன போக்குவரத்துக்கான
வாய்ப்புகள் என்பவை இந்தியர்களின் நாளாந்த நடையின் அளவையும் குறைத்து விட்டதாக கணிக்கப்படுகிறது.
விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக உருவாகியிருக்கும் மின்சாரத்தால் இயங்கும்
வீட்டு உபயோகப் பொருட்களின் பயன்பாடு காரணமாக, பெண்களின் மரபுசார் உடல் உழைப்பும் குறைந்து விட்டிருக்கிறது. இப்படியாக வாழ்க்கை தேவை,
போக்குவரத்து ஆகிய இரண்டு அடிப்படை விடயங்களில்
இந்தியர்களின் உடல் உழைப்பின் அளவு திடீரென குறைந்து விட்ட அதேசமயம், அவர்களின் அன்றாட உணவு முறையில் ஏற்பட்டிருக்கும் ஆரோக்கியமற்ற மாற்றமும்
கூட நீரிழிவு நோயை அதிகப்படுத்தும் காரணியாக உருவாகியிருப்பதாக பார்க்கப்படுகிறது. இறுதியாக
இன்றைய தலைமுறையினர் மத்தியில், சிறு வயது
முதலே அதிகரித்துவரும் மன அழுத்தமும் நீரிழிவு நோயை தூண்டுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மனிதர்களுக்கு
நீரிழிவு நோய் வருவதற்கான காரணிகள் பெருமளவு வாழ்முறை சார்ந்தவையாக இருந்தாலும்,
மரபணுக் காரணிகளும்
இதில் முக்கிய பங்காற்றுகின்றன.
"இந்திய உபகண்ட சமூகங்கள் மத்தியில் பலகாலமாக நீடித்து வரும் திருமண உறவு முறைகள்,
அதாவது குறிப்பிட்ட இன, மத, ஜாதிக் குழுக்களுக்குள்ளேயே மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொள்வது,
அதிலும் குறிப்பாக மாமன் மகள் அத்தை மகன்
போன்ற நெருங்கிய உறவுக்குள்ளான திருமணங்கள் நீரிழிவு நோயை ஊக்குவிக்கும் மரபணுக்களை
தலைமுறை தலைமுறையாக தொடரச் செய்வதோடு, அதன்
வீரியத்தையும் அதிகப்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கிறது" என்கிறார் நீரிழிவு நோய்
நிபுணர் மருத்துவர் மோகன்.
உலகின்
அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவை விட இந்தியாவில் நீரிழிவு நோயாளர்கள் அதிகமாக
இருப்பதற்கும் இந்தியர்களின் மரபணுக்களே காரணம் என்றும் கருதப்படுகிறது. இப்படி நீரிழிவை தூண்டும் இந்த
குறிப்பிட்ட மரபணுக்கள், இந்தியர்களிடம்
அதிகம் இருக்கின்றன என்றால் அந்த மரபணுக்களை இன்றைய இந்தியர்கள் பரம்பரை பரம்பரையாக தங்களின் பெற்றோரிடமிருந்து
பெற்றிருக்க வேண்டும். அப்படியானால், இந்த பெற்றோர் என்பவர்கள் யார்? அவர்கள் எப்படி காலம் காலமாக கணவன் மனைவியாக
ஒன்றிணைந்து குழந்தைகளை
பெறுகிறார்கள்? என்று பார்ப்பது
அவசியமாகிறது. அப்படிப் பார்க்கும்போது, மேற்குலக நாடுகளுக்கும், இந்தியர்களுக்கும் இடையில் நிலவும் திருமண நடைமுறைகளை ஒப்பிடும்போது,
இந்தியாவின் பாரம்பரிய திருமண நடைமுறைகள் என்பவை,
மரபணு ரீதியில் தனித்தன்மையை நீடிக்கச் செய்யும் முறைகளாகவும், மேற்குலக நாடுகளின் திருமண முறைகள் மரபணு
கலப்பை ஊக்குவிப்பவையாகவும்
இருப்பதாக சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
பொதுவாக
இந்திய உபகண்டத்தில் இனக்குழுக்களுக்குள், சொந்த
மதத்திற்குள், சொந்த ஜாதிக்குள்
திருமணம் செய்யும்
நடைமுறைகள் நீரிழிவு நோயின் தாக்கத்தை தீவிரப்படுத்து வதாகவும் ஆய்வாளர்கள்
சந்தேகிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, தென்னிந்தியாவில், குறிப்பாக
தமிழர்கள் மத்தியில் நிலவும், தாய்மாமனை
திருமணம் செய்யும் முறை, மாமன்
மகள், அத்தை மகன்களுக்கு இடையிலான
திருமணங்கள் போன்றவை எல்லாமே, நீரிழிவு
நோய் தொடர்பான மரபணுக்களை குறிப்பிட்ட குடும்பங்களில் தொடர்ந்து நீடிக்கச் செய்வதாக
ஆய்வாளர்கள் சந்தேகிக்கிறார்கள். இத்தகைய மரபணுக் காரணிகளை விளைவாக, நீரிழிவு நோய் தாக்கும் சராசரி வயதும் இந்தியர்கள் மத்தியில் வேகமாக
குறைந்து வருவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இருபது வயதுக்கு உட்பட்டவர்களுக்கேகூட இரண்டாவது ரக
நீரிழிவு நோய் தாக்குவது வேகமாக அதிகரித்துவருவதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள்
தெரிவிக்கின்றன.
மனிதர்களுக்கு
நீரிழிவு நோய் வருவதற்கான மரபுவழிக் காரணிகளில் முக்கியமான ஒன்றாக கருவுற்ற
தாய்மார்களுக்கு வரும் நீரிழிவு நோய் இருக்கக்கூடும் என்று சமீபகால ஆய்வுகள்
தெரிவிக்கின்றன. "மேற்குலக
நாடுகளைச்சேர்ந்த பெண்களோடு ஒப்பிடும்போது, இந்தியப் பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் வருவதற்கான
சாத்தியக்கூறுகள் மற்றும் குறைந்து வரும் உடல் உழைப்பு ஆகிய இரண்டு காரணிகள் இந்தியப்
பெண்கள் மத்தியில் கர்ப்பகால நீரிழிவை தூண்டுவதாக கருதப்படுகிறது" என்கிறார் நீரிழிவு
நோய் நிபுணர்
மருத்துவர் மாதுரி.
கர்ப்பகால நீரிழிவுநோய் காரணமாக, தாயின் ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை என்பது கருவில்
இருக்கும் குழந்தைக்கு தொப்புள்கொடி வழியாக சென்று குழந்தையின் கணையத்தை தூண்டி இன்சுலின்
சுரக்கச் செய்யும். இப்படி கருவில் இருக்கும்போதே குழந்தையின் கணையம் இன்சுலின் சுரப்பது
தவறு. அப்படி சுரப்பதன்
மூலம் கருப்பைக்குள்ளேயே குழந்தை யின் எடை மிக அதிகமாகி, இயற்கை யான முறையில் பிரசவம் நடக்க முடியாமல் போய்
பிரசவகாலத்தில் தாய் சேய் இருவரின் உயிருக்கும் ஆபத்தாக முடியலாம். அது மட்டு
மல்லாமல், குறைப்பிரசவம் நடப்பது,
குழந்தையின் உள்ளுறுப்புக்களில் குறைபாடு
ஏற்படுவது போன்ற
பல பிரச்சினைகள் இதனால் உருவாகக்கூடிய ஆபத்துக்கள் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் இத்தகைய
குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் நீரிழிவுநோய் உருவாவதற் கான சாத்தியங்களும் அதிகரிப்பதாகவும்
ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேற்குலக
நாடுகளைச் சேர்ந்த பெண்களோடு ஒப்பிடும்போது, இந்தியாவைச் சேர்நத பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய் உருவாவதற்கான
சாத்தியக்கூறுகள் பதினோறு சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கருவுற்ற நான்காவது
மாதம் முதல் தாயின் ரத்த பரிசோதனைகள் மூலம் கர்ப்பகால நீரிழிவுநோயை கண்டுபிடிக்க
முடியும். கர்ப்பகால
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களில் தொண்ணூறு சதவீத மானவர்களுக்கு உணவுக் கட்டுப்பாட்டின்
மூலமே அவர்களின் நீரிழிவை கட்டுப் படுத்திவிட முடியும். மற்றவர்களுக்கு இன்சுலின்
உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படலாம். இந்தியாவில் முதன் முறையாக தமிழ்நாட்டில் அனைத்து
கர்ப்பிணிகளுக்கும் கர்ப்பகால நீரிழிவு நோய்க்கான ரத்த பரிசோதனையை கட்டாயமாக்கி தமிழக அரசு
உத்தரவிட்டிருக்கிறது. இந்த முயற்சி கருவுற்ற தாய்மார்கள் மற்றும் அவர்தம் குழந்தைகள்
மத்தியிலான நீரிழிவுநோய் பரவலை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில்
சுமார் நான்கு முதல் எட்டு லட்சம் குழந்தைகள் டைப் ஒன் எனப்படும் முதல் ரக
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது. பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் இந்த முதல் ரக
சர்க்கரை நோய் என்பது குழந்தை பிறந்ததுமுதல் முப்பது வயது வரை தாக்கும் தன்மை கொண்டது.
பிறக்கும்போது, சில குறிப்பிட்ட மரபணுக்களை தங்களின்
உடலில் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே இந்த ரக நீரிழிவு நோய் உருவாகிறது. ஒரு குடும்பத்தில்
ஒரு குழந்தைக்கு இந்த முதல் ரக நீரிழிவு நோய் வந்திருந்தால், அவர்களின் சகோதர சகோதரிகளுக்கு இதே ரக நீரிழிவு நோய்
வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கிறது. இந்த ரக சர்க்கரை நோய் தாக்குவதை முன்கூட்டியே தடுக்க
முடியாது என்பதுடன், இந்த நோயின் அறிகுறிகள்
வெளியில் தெரிய ஆரம்பிக்கும்போது, அந்த
குழந்தைக்கு நீரிழிவு
நோய் ஏற்கெனவே வந்துவிட்டிருக்கும் என்பதால் இந்த குறிப்பிட்ட ரக நீரிழிவு நோயை அதன்
அறிகுறிகளை வைத்து முன்கூட்டியே அறிந்துகொள்வதோ, அல்லது அதன் ஆரம்ப கட்டத்தில் கண்டு பிடிப்பதோ, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ சாத்தியமில்லை
என்கிறார்கள் மருத்துவர்கள்.
மருத்துவரீதியில்
பார்த்தால், முதல் ரக நீரிழிவு நோயாளர்கள்
அனைவருமே மற்ற எல்லோ ரையும் போலவே ஆரோக்கியமான முழுமையான வாழ்க்கையை வாழ முடியும். ஆனால்
அவர்கள் அனைவரும் தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் இருப்பது அவசியம். கண்காணிப்பும்
சிறுவயது குழந்தைகளுக்கு
அளிக்கும் பொறுப்பு என்பதும் அவர்களின் பெற்றோர்களையே சாரும் என்பதால், இதன் தாக்கங்கள் அவர்களையே அதிகம் பாதிக்கும். இந்த
நோய் வந்த
பிறகு, தினமும் ஒன்றுக்கும்
மேற்பட்ட இன்சுலின் ஊசிகள் போட்டுக் கொள்வதன் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தை ஆரோக்கியமான
வாழ்க்கையை வாழ முடியும். அதே சமயம் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில்
இருக்கிறதா என்று தொடர்ந்து கண்காணிக்கப்படுவதும் அவசியம். இந்தியாவில் ஒரு குழந்தைக்கு முதல் ரக நீரிழிவு
நோய் தாக்கினால், அந்த குழந்தையும் அதன்
பெற்றோரும் பலவிதமான சமூக மற்றும் பொருளாதார சிக்கல்களை அன்றாடம் சந்திப்பதை அவர்களின் அனுபவங்கள்
வெளிப்படுத்துகின்றன. அதேசமயம், பெற்றோரின்
அன்பும், பள்ளிக்கூடத்தின்
அரவணைப்பும், சமூகத்தின் சரியான புரிதலும், அன்றாட இன்சுலின் ஊசி பாவனையும் இருந்தால்
முதல் ரக நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் சிறுவயது குழந்தைகளும் மற்றவர்களைப்போல வெற்றிகரமான வாழ்க்கை வாழமுடியும்
என்பதே மருத்துவர்களின் அறிவுரை.
வேறு சில
நோய்களைப் போலல்லாமல், நீரிழிவு நோயின் பாதிப்புக்கள்
நோயாளிக்கு தெரிவதற்கு பல ஆண்டுகள் பிடிப்பதால், பலரும் இதற்கான சிகிச்சை முறைகளை முறையாக
கடைபிடிப்பதில்லை. இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்று
அலட்சியமாக இருந்துவிடுகிறார்கள்.
இத்தகைய அலட்சியம் மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு போய்விடும் என்பதை அவர்கள் உணர வேண்டும்
என்கிறார் நீரிழிவு நோய் நிபுணர் எஸ்.ரவிக்குமார்.
நீரிழிவு
என்பது நோயா அல்லது ஒருவித உடல் குறைபாடா என்பது தொடர்பில் மருத்துவ உலகில் இன்றளவும்
சர்ச்சை தொடர்கிறது. உடலின் சகல பாகங்களையும் பாதிக்கும் பல்வேறு நோய்களை இது தோற்றுவிக்கும் என்பதால் இதை மதர் ஆப்
ஆல் டிசீசஸ், அதாவது மற்ற பல
நோய்களின் தாய் என்றும் இவர்கள் அழைக்கிறார்கள். அதேசமயம் இது ஒரு வித
உடற்குறைபாடு என்றும் இதை சரியான முறையில் கையாண்டால் இதைக் கண்டு யாரும் அஞ்ச
வேண்டியதில்லை என்றும் கூறுகிறார்கள்.
முதலாவதாக
நீரிழிவு நோயாளர்கள் தங்கள் உணவில் இனிப்பை முற்றாக தவிர்க்க வேண்டும். தினந்தோறும்
மூன்று வேளை வயிறு நிறைய சாப்பிடும் பழக்கத்திற்கு பதிலாக, சராசரியாக மூன்று மணிநேர இடைவெளியில், சிறுகச் சிறுக சாப்பிடுவது நீரிழிவு நோய்க்கு நல்லது.
மேலும் விரதம்
என்கிற பெயரில் நீண்ட நேரம் உணவு சாப்பிடாமல் இருப்பது கூடவே
கூடாது. இந்த உணவுக்
கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல் ஒருவர் என்னதான் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் அவரது நீரிழிவு
நோய் கட்டுப்பாட்டிற்குள் வராது என்று எச்சரிக்கிறார் உணவியல் நிபுணர் இந்திரா
பத்மாலயம். உணவுக்கு அடுத்தபடியாக அன்றாய உடற்பயிற்சி அவசியம். இதில் எல்லோராலும் செய்யக்கூடிய அன்றாட உடற்பயிற்சி
என்பது நடைப்பயிற்சி ஆகும்.
உடற்பயிற்சிக்கு
அடுத்ததாக நீரிழிவு நோய்க்கான மருந்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். மருந்து
மாத்திரைகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுப்படாவிட்டால் இன்சுலின் பரிந்துரைக்கப்படும்.
உடற்பயிற்சி, மருந்து மாத்திரைகள் என்று
நீரிழிவுக்கான சிகிச்சை முறைகள் மூன்று வழிகளில் மேற் கொள்ளப்பட்டாலும் இவை எல்லாவற்றுக்கும்
அடிப்படையாக இருக்க வேண்டியது நீரிழிவு நோய் தாக்குதலுக்குள்ளானவரின் ஒத்துழைப்பு
என்பதை மருத்துவர்கள் பலரும் வலியுறுத்து கிறார்கள். மேலும் நீரிழிவு குறித்த
விழிப்புணர்வு என்பது நீரிழிவு நோயாளி மட்டுமல்ல, அவரது குடும்பத்திற்கும் தெரிந்திருப்பது மிகவும் அவசியம். முறையான சிகிச்சை,
இதற்கு தேவையான மனக் கட்டுப்பாடும்
உறுதிப்பாடும் நீரிழிவு நோயாளர்கள் பலரிடம் காணப்படவில்லை என்பதோடு, நீரிழிவு நோயின் மிகத்தீவிரமான பாதிப்புகள் உடனடியாக
வெளியில் தெரிவதில்லை
என்பதாலும் பலர் இதற்கான சிகிச்சைகளை உரிய முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்வதில்லை என்கிறார் நீரிழிவு
நோய் நிபுணர் எஸ்.ரவிக்குமார்.
நீரிழிவு
நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து அதை கட்டுப் பாட்டில் வைத்திருந்தால்
ஆரோக்கியமான வாழ்க்கை வாழமுடியும் என் பது எவ்வளவு உண்மையோ, அதேயளவு, உண்மை நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விட்டால் அதன்
மோசமான பக்க விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும் என்பது. ஆனால் இது தொடர்பில்
நீரிழிவு நோயாளிகள் பலரும் உரிய கவனம் செலுத்துவதில்லை என்கிறார்கள் நீரிழிவு நோய் நிபுணர்கள்.
இரத்தத்தில்
சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்ததுக் கொள்ளத் தவறினால் ஏற்படும் பல்வேறு பின்விளைவுகளில்
முதன்மையானது, அவர்களின் நோய்
எதிர்ப்புத்தன்மை குறைந்துவிடுவது என்பதாகும். இதன் விளைவாக, மற்றவர்களைக் காட்டிலும் நீரிழிவு நோயாளர்களுக்கு தொற்றுநோய் வேகமாக
பரவும் என்கிறார் நீரிழிவு நோய் நிபுணர் பாலாஜி. அடுத்ததாக நீரிழிவு நோய் இரத்த
நாளங்கள் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் தன்மை கொண்டது என்பதால், தலை முதல் கால் வரை மனித உடலின் சகல பாகங்களிலும் இதன் பின்விளைவுகள்
வெளிப்படும். குறிப்பாக கண், இதயம்,
சிறுநீரகம் மற்றும் கால்களில் இது
ஏற்படுத்தும் நேரடி பாதிப்புகள் உயிராபத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.
இரத்த
அழுத்தத்திற்கான மாத்திரைகளை விடவும் வெள்ளைப்பூண்டு மிகவும் சக்தி வாய்ந்தது என்று
ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தினமும் வெள்ளைப்பூண்டை ஏதாவது ஒரு வகையில் உணவில் உண்டு வந்தால், அது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
உயர்
இரத்த அழுத்தம் கொண்ட ஆயிரக்கணக்கானோருக்கு ஆண்டுதோறும் மாரடைப்பு
ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளதாகவும். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சுமார் 5 மாத காலத்திற்கு தினமும் வெள்ளைப்பூண்டு அடங்கிய உணவினை
சாப்பிட்டு வந்தால் அவர்களின் இரத்த அழுத்தமானது குறிப்பிடத்தக்க அளவுக்கு குறையும் என்று
தெரிய வந்துள்ளது.
சில
நேரங்களில் உயர் இரத்த அழுத்த நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மாத்திரையின் விளைவுகளைக் காட்டிலும்வெள்ளைப்பூண்டு
நல்ல பலனைக் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.
மோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி--உணவே மருந்து,
மோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி--உணவே மருந்து,
உடலில் ரத்தத்தில்
ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த
திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள்.
இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
ஒன்பது நாட்கள் காலை 6 மணி மதியம் 12 மணி மாலை 6 மணி மொத்தம் பழங்கள் 1வது நாள் 1 1 1 3 பழங்கள்.2வது நாள் 2 2 2 6 பழங்கள்.3வது நாள் 3 3 3 9பழங்கள். 4வது நாள் 4 4 4 12 பழங்கள்.5வது நாள் 4 4 4 12 பழங்கள்.6வது நாள் 4 4 4 12 பழங்கள்.7வது நாள் 3 3 3 9 பழங்கள்.8வது நாள் 2 2 2 6 9வது நாள் 1 1 1 3பழங்கள்ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப் பாருங்கள்.
தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளாபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளாபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து அருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர், ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும். செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் இழந்த சக்தியையும், உற்சாகத்தையும் நாம் பெறலாம்.
ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள்.
இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
ஒன்பது நாட்கள் காலை 6 மணி மதியம் 12 மணி மாலை 6 மணி மொத்தம் பழங்கள் 1வது நாள் 1 1 1 3 பழங்கள்.2வது நாள் 2 2 2 6 பழங்கள்.3வது நாள் 3 3 3 9பழங்கள். 4வது நாள் 4 4 4 12 பழங்கள்.5வது நாள் 4 4 4 12 பழங்கள்.6வது நாள் 4 4 4 12 பழங்கள்.7வது நாள் 3 3 3 9 பழங்கள்.8வது நாள் 2 2 2 6 9வது நாள் 1 1 1 3பழங்கள்ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப் பாருங்கள்.
தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளாபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளாபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து அருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர், ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும். செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் இழந்த சக்தியையும், உற்சாகத்தையும் நாம் பெறலாம்.
Subscribe to:
Posts (Atom)