Saturday, 17 January 2015

சுகப்பிரசவம் அடைய



       கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப கடைபிடிக்க வேண்டிய சடங்கு முறைகள் உள்ளன. இத்தகைய சடங்களை கடைப்பிடித்தால் பிரசவம் சுகபிரசவமாக அமையும். தாய்க்கும், சேய்க்கும் ஏதாவது தோஷங்கள் இருந்தால் விலகும். கர்ப்பமான இரண்டாவது மாதம் இரட்டை பிள்ளையார் வைத்து இரட்டை பழமும், பொங்கலும் நெய்வேத்தியம் வைத்து வணங்க வேண்டும்.
            மூன்றாவது மாதம் சூலமெழுதி பொங்கல் நைவேத்தியம் வைத்து வணங்க வேண்டும்.
             நான்காவது மாதம் நாகம் எழுதி பொங்கல் நைவேத்தியம் வைத்து வணங்க வேண்டும்.
             ஐந்தாவது மாதம் சிவபெருமானுக்கு மாலை சார்த்தி வணங்க வேண்டும்.
             ஆறாவது மாதம் முருகபெருமானை மலர்சூடி வணங்க வேண்டும்.
             எழாவது மாதம் சப்த கன்னியர்களை வணங்க வேண்டும்.
             எட்டாவது மாதம் விஷ்ணு பகவானை வணங்க வேண்டும். சீமந்தம் செய்ய வேண்டும்.
              ஒன்பதாவது மாதம் நவகிரக பூஜை செய்தல் வேண்டும்.
             பத்தாவது மாதம் இஷ்ட தேவதையை பூஜை செய்து வணங்க வேண்டும்.
               இரண்டாம், மூன்றாம், நான்காம், மாதங்களின் கடைசியிலும் ஐந்து, ஆறு, எழு, எட்டு, ஒன்பது, பத்தாம் மாதங்களின் தொடக்கத்திலும் மேற்கண்ட சடங்குகளை செய்ய வேண்டும்.
ஒரு பெண்ணுக்கு சுகமாகப் பிரசவம் ஏற்பாடு செய்ய வேண்டிய பரிகாரங்கள்
                  வியாழக்கிழமை குரு ஹோரையில் தட்சிணாமூர்த்திக்கு, கொண்டக்கடலை நிவேதனம் செய்து விநியோகம் செய்தல்.
                  குருபகவானுக்கு மஞ்சள் பொடி அபிசேகம் செய்தல்.
                  சஷ்டி திதிதொறும் விரதமிருந்துசுந்தர் கலிவெண்பாநூலைப் பாராயணம் செய்து வர வேண்டும்.
                 மஞ்சள் வஸ்திரம் தானம் செய்தல்.
                 திருசெந்தூர் முருகனுக்கு 108 எலுமிச்சை பழங்களைக் கொண்டு மாலை அணிவித்தல்.
                 கார்த்திகை நட்சத்திரம் வரும் நாட்களில் ஆறுசிட்டிகளில் நெய் ஊற்றி, திரிவைத்து விளக்கேற்றி தெப்பக்குளத்தில் மிதக்க விட்டு வணங்குதல், பின் சிட்டிகளை வீட்டிற்கு எடுத்து வந்து விடவேண்டும்.  தொடர்ந்து பயன்படுத்தலாம்.
                  தாய்க்கு எத்தனை வயதாகிறதோ அத்தனைக் கரும்புகள் கோயில் யானைக்கு வழங்குதல்.

No comments:

Post a Comment