Saturday, 17 January 2015

சிறுநீர் கோளாறுக்கு , குழந்தையின் மலசிக்கலுக்கு



,சிறுநீர் கோளாறுக்கு , குழந்தையின் மலசிக்கலுக்கு :

9
மன நோய் சரியாக:
வெண்தாமரையைக் கொண்டு வந்து கஷாயம் வைத்து
சாப்பிட்டு வந்தால் (ஒரு மண்டலம் 48 நாட்கள் குடிக்க
வேண்டும் ) இருதய நோய்கள் குணமாகும் .
அத்தோடு  மாநோயும்  குணமாகிறது .


ஜபம் செய்யும் முறை:
பிறர் காதில் விழும்படி ஜெபம் செய்வது  வாசிகம் .
தனது காதில் விழும்படி செய்வது உபாம்சு .மனதில் மட்டும்
சொல்வது மானசம் .வாசிகம் ஒரு மடங்கு பயனளிக்கும் .
மானசம் ஆயிரம் மடங்கு பயனளிக்கும் .


சிறுநீர்  கோளாறுக்கு:
சிறுநீர்  சம்பந்தமான கோளாறு  உள்ளவர்கள்  கீழாநெல்லி
இலையை ஒரு கைபிடியளவு  எடுத்து இடித்து
சாறு பிழிந்து  கர்கண்டுத் தூள்  சேர்த்து
சாப்பிட்டு வந்தால் ,சரியாகும் .


தாய்க் குலத்திற்கு :
அக்னியை  வாயால் ஊதி எழுப்பவோ ,அணைக்கவோ கூடாது .
உரல் ,அம்மி ,உலக்கை ,வாயிற்படி ,முறம் இவைகளில் உட்காரக்கூடாது .
இரவில் மிஞ்சிய உணவை மண் பாத்திரங்களில் வைத்திருக்கக்கூடாது .
அன்னம் ,உப்பு ,நெய் இவைகளை கையால் பரிமாற கூடாது .
உப்பும் ,நெய்யும்  எச்சில் செய்தபின் பரிமாறக்கூடாது.


குழந்தையின் மலசிக்கலுக்கு :
    உலர்ந்த  திராட்சைப் பழங்களை தண்ணீரில்
ஊரப்போட்டச் சிறிது நேரம் கழித்து ,அப்பழத்தைக்
கசக்கிப் பிழியுங்கள் .அதை வடிகட்டி எடுத்துக்
குழந்தைக்குக் கொடுங்கள் .இதனால் மலச்சிக்கல்
குணமாகும் .குழந்தையின் கணைச்சூடும்  மாறும்

No comments:

Post a Comment